Posts

Showing posts from April 18, 2010

அரசியல்வாதிகள் ...

Image
ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்  என்று சொல்லி சிரித்த இறைவனையும்  ஏழையாக்கி விட்டனர் இந்த அரசியல்வாதிகள் ...

ஜனநாயகம்

உழைத்தால் உயரலாம் என்றார்கள் உழைத்தேன் உயர்ந்தது நான் அல்ல முதலாளிதான் கேட்டால் கிடைக்கும் என்றார்கள் கேட்டேன் கிடைத்தது தடி அடியும் சிறை வாசமும் முயன்றால் முடியும் என்றார்கள் முயன்றேன்  முடிந்தது என்னவளுக்கு வேறொரு இடத்தில் திருமணம்  உழைத்தும் உயரவில்லை ,கேட்டும் கிடைக்க வில்லை  முயன்றும் முடியவில்லை .. அட ..இது தான் ஜனநாயக நாடோ ?