Posts

Showing posts from August 29, 2010

காதல் வந்ததடி

காதல் வந்தால் தான் கவிதை வருமென்பார்கள்  கவிதையை பார்த்த பின்புதான் எனக்குள் காதல் வந்ததடி ...i ESKITHA PERIYASWAMY.

உன்னிலிருந்து

உனக்கு பிடித்தவை எல்லாம் எனக்கும் பிடிக்கிறது அது உனக்கு பிடிக்கும் என தெரிந்ததிலிருந்து ... ESKITHA PERIYASWAMY

மழை

இன்று என்னவளுக்கு வேறொரு இடத்தில் திருமணம்  அட எனக்காக மேகம் கூட அழுகிறதோ ..மழை 

ஆமோதிப்பு ........

                   சரவணா நாளைக்கு கரெண்ட் பில் கட்டணும் மறந்துடாதே ... அம்மா வழக்கம் போல் நினைவு படுத்துகிறார் ... தம்பி அவன்  தட்டில் பதார்த்தத்தை காலி செய்து விட்டு   என் தட்டில் கை வைக்கிறான் ... அப்பாவிற்கு தெரியாமல் செல்ல நாய் ஜிம்மிக்கி சாதம் கொண்டு செல்கிறாள்  தங்கை .. இவைகளினுடே நான் உனை பற்றி தான்   நினைத்து கொண்டிருக்கிறேன் என்பதை ஆமோதிப் பதாய் வருகிறது ....... நீ அனுப்பிய குறுந்தகவலின் ஒலி.