Posts

Showing posts from May 1, 2011

நான் சண்முகம் ஆனது

Image
மூன்றாம் வகுப்பிலிருந்து நான்காம் வகுப்பிற்கு ஆசிரியர் ஒவ்வொருவரையும் பெயர் வாசித்து உட்கார வைத்துகொண்டிருந்தார் என் இடமும் வந்தது ,மூன்றாம் வகுப்பு வரை தான் பலகை வைத்து எழுத வேண்டும் பல்பத்தை மறந்து பேனாவை கையில் எடுத்த தினம் அது ,வகுப்புல நான் தான் லீடர் ஆரம்ப பள்ளி என்பதால் பள்ளி மாணவ தலைவனும் நான் தான், குடியரசு தினம் ,சுதந்திர தினம் போன்ற நாட்களில் நான்  தான் தேசியகீதம் பாட வேண்டும் , அம்மாசி டீச்சர் அவங்க தான் நான்காம் வகுப்பு ஆசிரியர் ஒல்லியா கருப்பா இருப்பாங்க !!நல்லா முழுசு முழுசா எழுதுவாங்க Sanmugam எழுதி கொண்டிருந்த என்னை பெயர் மாற்றி Shanmugam என சரியாக சொல்லி கொடுத்தார் ,, காலைல சீக்கிரமா வந்த உடன் பசங்களோடு சேர்ந்து கொஞ்ச நேரம் கிரிக்கெட் விளையாடுவோம் , பிளாஸ்டிக் பந்து தான் அப்பெல்லாம்,என்  வகுப்பு பக்கத்திலே சின்னதா கிரௌண்ட் இருக்கும் அங்க தான் விளையாடனும் ,அங்க விளையாடுரதுலையே நான் தான் பந்தை ரொம்ப தூரம் தூக்கி அடிப்பேன் ,இப்ப வரைக்கும் அதுதான் , ஒரு முறை நடந்த பள்ளி ஆண்டு விழா விளையாட்டு போட்டில கலந்து கொள்ள  போகும் போது அம்மாசி டீச்சர் நீ குள்ளம