Posts

Showing posts from August 15, 2010

கனவல்ல நிஜம்

Image
கடற்கரைக்கு அழைத்தவுடன் வந்துவிட்டாய்  மறுப்பேதும் பேசாமல் என்னுடன்  அலையை ரசித்தபடி நீ  உன்னை ரசித்தபடி நான்  சுகந்தமான உன்னை தரிசிக்க  அலைகள் இரண்டு சண்டையிட்டு  கரைக்கு விரைகின்றன  நான் பேச எத்தனித்த வார்த்தைகளை  நீ சேமிப்பதற்குள்   கடற்கரை  உப்பு காற்றில் அவை கரைந்து விடுகின்றன  நீ வீட்டிற்க்கு போகலாம் என  எழுந்து உன் மேல் மணல்துகள் களை துடைக்கையில் சொற்ப ஆயுளை கொண்ட அவைகள் ஒவ்வொன்றும்  செத்து செத்து விழுகின்றன மீண்டும் மண்ணிலேயே  நேற்றை போலவே வெறுமென கழிந்தது இன்றைய கனவு  நாளை நிச்சயம் சொல்லிவிடுவேன் என் காதலை உன்னிடம்  கனவில் அல்ல நிஜத்தில் ..

சுதந்திரம் கிடைத்து விட்டதாம் ...

Image
   சுதந்திரம் நமக்கு கிடைத்து விட்டதாம்  யாருக்கு அவை ஈழம் இங்கு ஆழமாய்  புதைந்ததில் தானும் சேர்ந்து மண்ணோடு  புதைந்திற்று சுதந்திரத்திற்கு தானே போராடினோம்  உங்கள் வீட்டில் ஒருவர் வந்திருந்தால்  எங்கள் வீட்டில் ஒருவராவது  பிழைத்திருக்க கூடும் வங்ககடலில்  குருதியோடு சேர்ந்து எங்கள் கண்ணீரால்  கடல் மட்டம் கூடிவிட்டிருக்க கூடும்  உலகம் இப்படியே சுழலட்டும்  நாளை நாணயங்களில் உள்ள  புகை படங்கள் கூட சுதந்திரத்தை  குறை சாற்றும் என்னை போல .. பா ;சண்முகம்