Posts

Showing posts from March 13, 2011
Image
இது எப்படிடி நடந்ததுன்னு கேட்டா நீ நீயா இருப்பதாலும் நான் நானாக இருப்பதாலும் ன்னு குணா படத்துல வர வசனம் பேசுவா''என் யாழினி  .., அதுதான் எனக்கு அவ கிட்ட ரொம்ப பிடித்தது ,நடு நடுவே இப்படி பேசினா என்ன அர்த்தம் ன்னு சொல்லுவா அவளோட அந்த ஒவ்வொரு அர்த்தத்திலும் நான் அர்த்த மற்றவன் ஆகிருகிறேன் பிறந்தநாள் அன்று உன்னை பார்த்தேன் பரிசளிக்க கையில் பரிசினை ஒளித்து வைத்திருந்தேன் ,உன் பக்கத்தில் பறந்த ஆரஞ்சு வண்ண பட்டாம்பூச்சி உன் மேல் மெதுவாய் மோதி வண்ணங்கலற்று வெறுமையாய் பறந்தது .அதை விட சிறந்தது அல்ல என் பரிசு, எனக்கு முன் முந்தி கொண்டது பட்டாம் பூச்சி ... உனக்காக பூங்காவில் காத்திருந்தேன் என் அருகில் இருந்த மரக்கிளையில்  பறவை ஒன்று தனியே அமர்ந்திருந்தது ,நீ வர தாமதமானதால் நான் கிளம்ப தயாரானேன் அந்த பறவையும் பறந்து விட்டது பாவம் அதுவும் தன் ஜோடிக்காக காத்திருந்ததோ என்னவோ ?' இருவரும் குளக்கரையில் அமர்ந்திருந்தோம் சிறு சிறு கற்களை குளத்தில் போட்டபடி நீ  இருந்தாய் எத்தனை முறை உடைந்தது குளம் . பூங்காவின் புல் தரை

மிட்டாய் நினைவுகள்

வண்ணங்கலற்று வெறுமையாய்  கழிந்த என் நாட்கள் நீ வந்ததிலுருந்து வானவில்லாய் நகர்கிறது மாடியில் உறங்கும் பொழுது உன் முற்றத்து நட்சத்திரங்களை  எண்ணி கொண்டிருந்தாய் விடிந்த பின் நீ விரல் நீட்டிய நட்சத்திரங்கள் விழுந்து கிடக்கின்றன உன் வாசலில் .... சூரியனிடம் அனுமதி வாங்கி சீக்கிரமே வருகிறது நிலவு ,, தான் கூடுகளுக்குள் உள்ள பறவைகள் சத்தமின்றி கிடக்கின்றன உன் முற்றத்து நட்சத்திரங்கள் கண் சிமிட்டி சிணுங்கி கொண்டே இருக்கிறது உருகி கொண்டிருக்கிறது நிலவு ஊரில் இருந்து நீ வீட்டிற்க்கு வரும்  உன்  வருகையை அறிந்து ... ஒவ்வொரு முறை நீ குறுந்தகவல் தட்டச்சும் போதும் உன் விரல்களின் வலியை உணர்ந்தே படிக்கிறேன் இனி நீ சொல்ல வேண்டியதை மனதில் நினை அது போதும் எனக்கு காற்றில் அலையும் தகவலை படித்து கொள்கிறேன் நான் . விடியல் வந்தும் தூங்கும் உன்னை அருகில் அமர்ந்து ரசிக்கிறேன் எந்த சலனமும் இல்லாமல் என்னோடு  சேர்ந்து ரசித்துக்கொண்டு இருக்கிறது உன்னை   சூரியனும் ...