Posts

Showing posts from March 21, 2010

காதலிக்கிறேன் என்று சொல் ...

பக்கத்துக்கு தெருவில் இருக்கும் கோவிலுக்கு பாட்டியை அழைத்து செல்ல வேண்டுமாம் அப்பா சொன்னார் செய்யவில்லை உனக்காக இங்கே காத்திருக்கிறேன் .. தோட்டத்தில் பூத்து குலுங்கும் மல்லி கொடிக்கு பந்தலிட வேண்டுமாம் அம்மா சொன்னார் செய்யவில்லை உனக்காக இங்கே காத்திருக்கிறேன் .. நாளை தோழியின் திருமணதிற்கு நளினமாய் செல்ல புடவையை தேய்த்து தர சொன்னாள் அக்கா செய்யவில்லை உனக்காக இங்கே காத்திருக்கிறேன் .. ஏய் கவிதை பெண்ணே , நான் காத்திருப்பதுதான் உனக்கு சுகம் என்றால் சொல்லிவிடு இந்த ஜென்மம் மட்டுமல்ல இனி வரும் எத்தனை ஜென்மத்திலும் உனக்காக காத்திருக்கிறேன் நீ மட்டும் என்னை காதலிக்கிறேன் என்று சொன்னால் ...

நீயும் பச்சோந்தியும்

சொல்லப்போனால் நீயும் பச்சோந்தியும் கூட ஒன்றுதான் அது அடிக்கடி நிறத்தை மாற்றுகிறது நீயோ மனதை மாற்றுகிறாய் .

நினைவுகள்

நேற்றைக்கு தான் நிகழ்ந்தது போல் இருக்கிறது உன் திருமணம் அதற்குள் உன் குழந்தைக்கு பெயர் சூட்டு விழாவாம் கணவரோடு வந்திருந்தாய் அழைப்பிதழ் தருவதற்கு நாட்கள் தான் எவ்வளவு வேகமாய் நகர்கின்றன ஆனால் என்னுள் மட்டும் நகராமலே உன் நினைவுகள் .......