மிட்டாய் நினைவுகள்
வண்ணங்கலற்று வெறுமையாய்
கழிந்த என் நாட்கள்
நீ வந்ததிலுருந்து வானவில்லாய் நகர்கிறது
மாடியில் உறங்கும் பொழுது உன்
முற்றத்து நட்சத்திரங்களை
எண்ணி கொண்டிருந்தாய்
விடிந்த பின் நீ விரல் நீட்டிய நட்சத்திரங்கள்
விழுந்து கிடக்கின்றன உன் வாசலில் ....
சூரியனிடம் அனுமதி வாங்கி சீக்கிரமே வருகிறது நிலவு ,,
தான் கூடுகளுக்குள் உள்ள பறவைகள் சத்தமின்றி கிடக்கின்றன
உன் முற்றத்து நட்சத்திரங்கள் கண் சிமிட்டி
சிணுங்கி கொண்டே இருக்கிறது
உருகி கொண்டிருக்கிறது நிலவு
ஊரில் இருந்து நீ வீட்டிற்க்கு வரும்
ஒவ்வொரு முறை நீ குறுந்தகவல்
தட்டச்சும் போதும் உன் விரல்களின்
வலியை உணர்ந்தே படிக்கிறேன் இனி
நீ சொல்ல வேண்டியதை மனதில் நினை
அது போதும் எனக்கு காற்றில் அலையும்
தகவலை படித்து கொள்கிறேன் நான் .
விடியல் வந்தும் தூங்கும் உன்னை
அருகில் அமர்ந்து ரசிக்கிறேன்
எந்த சலனமும் இல்லாமல் என்னோடு
சேர்ந்து ரசித்துக்கொண்டு இருக்கிறது அருகில் அமர்ந்து ரசிக்கிறேன்
எந்த சலனமும் இல்லாமல் என்னோடு
உன்னை சூரியனும் ...
Comments