காதல் கொண்டு அழிக்கிறாய் .
எமன் எந்த ரூபத்தில் வந்தாலும் நான் எதிர்ப்பேன்
என தெரிந்துதான் என்னவள் ரூபத்தில் வந்தான் .அவன்
எந்த ஆயுதம் எடுத்து வந்தாலும் நான் அழிப்பேன்
என தெரிந்து தான் காதல் எனும் ஆயுதத்தை தாங்கி வந்தான்
நான் ஜெயித்து இருப்பேன் தோற்பது நீயாக இருப்பதால்
நான் தோல்வியை தழுவினேன் ..
ஜெயித்த எமனிடம் தோற்றவனின் ஒரு கேள்வி
எங்களை அழிக்க தான் உலகில் எவ்வளவோ
வழிகள் இருக்கையில் கன்னியரை பயன்படுத்தி
ஏன்..காதல் கொண்டு அழிக்கிறாய்....
சண்முகம் ...
Comments