கவிதைகளும் நீயும்

நீ பேசிய வார்த்தைகளை உன்னிடமே

கூறும் போது அவை தன்னிச்சையாய்

கவிதை ஆகிறது எனக்கு தெரியாமல் ,..

நான் சொல்லவந்த வார்த்தைகள் உன்னிடம்


வந்து சேர்வதற்குள் நீ புதுப்புது வார்த்தைகளை

கூறுகிறாய் என்னை விட உன்னுடையது சிறந்தது

என்பதால் என்னை போலவே என்

வார்த்தைகளும் மௌனமாகிவிடுகின்றன .,,

அன்று உனக்காகத்தான் காத்துகொண்டிருந்தேன்

உன்னை இன்னும் நேரில் சந்திக்காத நான் .,,,

நீ எப்படி இருப்பாய் என எனக்கு பிடித்தவர்களை

நினைத்து பார்க்கையில் ஒவ்வொருவராய்

சென்று மறைகிறார்கள் ,,நீயும் வந்து விட்டாய்

உன்னை நான் பார்க்காமலே இருந்திருக்கலாம் !!

இனி எனக்கு பிடித்தவர்கள் பட்டியலில் எவரும்

இருக்கபோவதில்லை உன்னை தவிர ,,..

உனக்காக காத்து கொண்டிருக்கும் நேரத்தில்

பல கவிதைகளை எழுதி இருப்பேன் அவை

அனைத்தும் இன்று சொல்லப்பட வில்லை

இருக்கட்டும் உன்னை விட சிறந்தது ஒன்றும் இல்லை

எல்லா கவிதைகளும் ,,..

நீ என்னை நினைத்திரு

நான் உன்னை நினைத்திருக்கிறேன்

என் கவிதைகளை நினைவில் வை

காதலும் கற்று மற........
 பா;சண்முகம் .

Comments

Popular posts from this blog

வியாபாரம்

வாழ்வியலுக்கான சாத்தியங்கள்