கல்லறைச் சாலை ..



நேற்று இறந்ததாகச் சொல்லப்படும்

கதிரேசனும் இதற்கு  முந்தைய வாரம்
இறந்து  போன செல்லியம்மனும் ,சுந்தரமும்
இந்த வழியாகத்தான் மயானம் கொண்டு செல்லப்பட்டார்கள்...

இரவு காட்சி முடித்து  வெளியேறும் கூட்டத்தில்

வடமாநிலத்தான் ஒருவன் துப்பிய பாக்குக்கறை

நேற்று லாரியில் அடிபட்டு இறந்த
நாய் ஜிம்மியின் ரத்தத்தினை போலிருந்தது
பிய்ந்து கிடக்கும் சாலை தன்னுள்
தெரியும் மழை நீரில் நிலவை
அழகுபடுத்திக் கொள்ள அனுமதித்துள்ளது...!
இரவு வந்த பின்னமும்  

விழித்துகொண்டிருக்கிறது
உயிர் எனும் வரையறை அற்ற
இந்த கல்லறை சாலை!!
                           
                                            பா.சண்முகம்

Comments

Popular posts from this blog

வியாபாரம்

வாழ்வியலுக்கான சாத்தியங்கள்