பால்யத்தின் பக்கங்கள் !

 
வெற்றிடம் ஒன்றின் இருட்டு மூலையில்
மெல்லிய நூல் ஒன்றின் முனையில் கட்டப்பட்டு
சதுரமாய் வரைந்து
தொங்கிகொண்டிருகிறது வானம்.
நெடு உயரத்தில் பருந்தொன்று
தன் அலகில் இரையை கொத்தியபடி
பறந்து செல்கிறது.
மற்றொரு ஓவியத்தில்
குதிரை ஒன்று வேகமாய் ஓட
புழுதியை கிளப்பியபடி விரிகிறது சாலை.
பக்கத்தில் அமர்ந்து கிறுக்கி கொண்டிருக்கிறாள் 
இரண்டு வயதையொத்த பெண் குழந்தை.
அப்படி ஒன்றும் இல்லை என் ஓவியம்
அவளுடையதைபோல் !
அவளை பால்யமென நினைத்து கொண்டிருக்கிறேன். 
அந்தவெற்றிட இருட்டில்
என்னை அவள் பால்யமென
சுமந்து
திரிந்து  கொண்டிருக்கிறாள்
கையில் தூரிகையோடு !!!

                            

பா .சண்முகம்

Comments

Popular posts from this blog

வியாபாரம்

வாழ்வியலுக்கான சாத்தியங்கள்