நிர்வாணம்
அடுத்தவர்களை மறந்து, தன்னை மட்டும் அறிந்த
பைத்தியக்காரன் எனப்படும் ஒருவன்,
நெடுக செல்லும் சாலை ஒன்றில் செல்கிறான் ,
வீசும் காற்றில் அவன் ஆடை விலக ,
நிர்வாணத்தை மறந்து தன் கைலியை
மட்டும் பத்திரபடுத்துகிறான்
அவ்வழியே அவனை சிரிப்புடன்
கடந்து போகின்றன
ஆடையணிந்த அவிழ்க்கப்படாத சில
நிர்வாணங்கள்
பா.சண்முகம்
Comments