சுதந்திரம் கிடைத்து விட்டதாம் ...
சுதந்திரம் நமக்கு கிடைத்து விட்டதாம் யாருக்கு அவை ஈழம் இங்கு ஆழமாய் புதைந்ததில் தானும் சேர்ந்து மண்ணோடு புதைந்திற்று சுதந்திரத்திற்கு தானே போராடினோம் உங்கள் வீட்டில் ஒருவர் வந்திருந்தால் எங்கள் வீட்டில் ஒருவராவது பிழைத்திருக்க கூடும் வங்ககடலில் குருதியோடு சேர்ந்து எங்கள் கண்ணீரால் கடல் மட்டம் கூடிவிட்டிருக்க கூடும் உலகம் இப்படியே சுழலட்டும் நாளை நாணயங்களில் உள்ள புகை படங்கள் கூட சுதந்திரத்தை குறை சாற்றும் என்னை போல .. பா ;சண்முகம்
Comments